என்னுடைய சத்திய சோதனைகளிடம் நான் பெருமதிப்பு வைத்துள்ளேன். அவற்றின் பெருமை நன்கு வெளியாகும்படி செய்தேனாவென்று நான் அறியேன். உள்ளது உள்ளபடி அவற்றை விவரிக்க நான் பெரும் முயற்சி செய்தேன் என்று மட்டுமே சொல்லக் கூடும். சத்தியத்தை, நான் கண்டது கண்டபடியே, நான் கண்ட முறையிலேயே, அணுவளவும் மாறுதலன்றி விவரிக்க இடைவிடாது முயன்றிருக்கிறேன்.
- சத்திய சோதனை , மகாத்மா காந்தி